வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
நற்செய்கை என்ற பெயரில் வரும் இந்த புத்தாண்டு அனைத்தையும் நல்லனவற்றையே தரும் என்று நம்புவோமாக.
இந்த இதழில் வேரும் தளிரும் தனது ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.
வழக்கமான பகுதிகளை அப்படியே தொடர்வோம். தரவிறக்கம் செய்து கொண்டு முழு கட்டுரைகளையும் படிக்கலாம்.
1) முகப்பக்கத்தில் சாந்தி சமூக சேவை நிறுவனத்தின் தொண்டுகளை சிறப்பாக வடிவமைத்த திரு பி.சுப்பிரமணியன் பற்றியது.
தொழிலதிபர்களும் அன்றாட மக்களின் தேவையை புரிந்து கொண்டு தமது செல்வத்தை பங்கிட்டு கொள்ள முன் வருவதை திரு சுப்பிரமணியத்தின் சேவை அமைப்பின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
2) தெரிந்த ஊர் தெரியாத விஷயத்தில் திருச்சியில் உள்ள மங்கம்மாள் அரண்மனை பற்றிய வரலாற்றை படிக்கலாம்.
3) இந்த மாதத்து பழமொழிக் கதை " கற்றது கைமண் அளவு"
தவறாமல் உங்களுடைய மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.

No comments:
Post a Comment